மாணவர்களுக்கு பரிசு வழங்கிய எம்.எல்.ஏ

மாணவர்களுக்கு பரிசு வழங்கிய எம்.எல்.ஏ
வீரகேரளம்புதூரில் மாணவர்களுக்கு எம்,எல்,ஏ பரிசு வழங்கினார்
சுரண்டை ஜவஹர்லால் நடுநிலைப்பள்ளியில் தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு எம்.எல்.ஏ பழனி நாடார் பரிசுகளை வழங்கினார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டை ஜவஹர்லால் நடுநிலைப்பள்ளியில் தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தாளாளர் ஜேம்ஸ் பொன்னையா தலைமை வகித்தார். தலைமையாசிரியர் பொடி மோனிகா வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பழனி நாடார் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகளும் ஆசிரியர்களும் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story