தூசி அருகே மது விற்றவர் கைது

தூசி அருகே மது விற்றவர் கைது

காவல் நிலையம்

தூசி அருகே மது விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் தூசி கிராமத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக தூசி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது மது விற்பனை செய்து கொண்டிருந்த முருகன் என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் 40 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story