ஜேசிபி இயந்திரம் மூலம் குள கால்வாய்கள் சீரமைப்பு

ஜேசிபி இயந்திரம் மூலம் குள கால்வாய்கள் சீரமைப்பு

கால்வாய்கள் சீரமைப்பு 

ஆலங்குளம் அருகே வீராணத்தில் மழை நீர் ஊருக்குள் வருவதை தடுக்க குளத்து கால்வாய்கள் சீரமைக்கும் பணி நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் வீராணத்தில் தொடர் மழை காரணமாக வடக்கு, பள்ளிவாசல் விளையாட்டு மைதான ஓடையிலிருந்து தெற்கு நோக்கி ஊருக்குள் வந்து கொண்டிருந்த மழை வெள்ளநீரை ஜே.சி.பி இயந்திரம் மூலம் மழைநீர், ஓடை வழியாக ஊருக்குள் வருவதை அடைத்து , மழை வெள்ளநீர் குளத்திற்கு செல்லும் வகையில் மாற்றுப் பாதை ஏற்படுத்தி கால்வாயின் மேலுள்ள பாலத்தின் வழி பாதையை சமன்படுத்தி போக்குவரத்திற்கு மாற்றுப் பாதை சீர் செய்யப்பட்டது. இப்பணியில் தி.மு.க கிளைச் செயலாளர் பாலசுப்ரமணியன்,, மாவட்ட துணை அமைப்பாளர் அமானுல்லா, ஒன்றிய பிரதி முகம்மது அலி, இளைஞர் அணி அன்சர் அலி, வீராணம் முத்தலிவு, சதாம் உசேன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story