தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கு அகில இந்திய துணை தொழிற்தேர்வு

தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கு அகில இந்திய துணை தொழிற்தேர்வு
ஆட்சியர் தீபக் ஜேக்கப்
கைவினைஞர் பயிற்சித்திட்டத்தின் கீழ் படித்து தேர்வில் தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்கள் மார்ச் மாதம் நடக்கும் அகில இந்திய துணை தொழிற்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்
கைவினைஞர் பயிற்சித்திட்டத்தின் கீழ் 2017-2019-ல் இரண்டாமாண்டு தொழிற்பிரிவில் சேர்க்கை செய்யப்பட்டு, அனைத்து தகுதி இருந்தும் தேர்வில் கலந்து கொள்ள இயலாத மற்றும் தேர்வில் தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கு அகில இந்திய துணை தொழிற்தேர்வு மார்ச் 2024-ல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, துணைத்தேர்வு தொடர்பாக முன்னாள் பயிற்சியாளர்கள் தாங்கள் பயின்ற தொழிற்பயிற்சி நிலையங்களை 15.02.2024 தேதிக்குள் தொடர்பு கொண்டு, சம்பந்தப்பட்ட பாடங்களுக்கான தேர்வுக் கட்டணத்தை தொழிற் பயிற்சி நிலைய வழிகாட்டுதலின்படி செலுத்தி, இந்த வாய்ப்பினை பயன்படுத்தி துணைத் தேர்வில் கலந்து கொள்ளலாம். அகில இந்திய தொழிற்தேர்வு மார்ச் 2024 குறித்த தகவல்களை உடனுக்குடன் பெற http://skill training.tn.gov.in மற்றும் https://ncvtmis.gov.in ஆகிய இணையதளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக தொலைபேசி எண் 04362-278222 இல் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story