சங்கரய்யா மறைவு அனைத்துக் கட்சியினர் அமைதி ஊர்வலம்

சங்கரய்யா மறைவு அனைத்துக் கட்சியினர் அமைதி ஊர்வலம்

அனைத்துக் கட்சியினர் அமைதி ஊர்வலம்


சங்கரய்யா மறைவு அனைத்துக் கட்சியினர் அமைதி ஊர்வலம்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சுதந்திர போராட்ட வீரரும், தகைசால் விருது பெற்றவரும், இந்திய கம்யூனிஸ்ட் இயக்க தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபக தலைவர்களில் ஒருவருமான சங்கரய்யா நேற்றுமுன்தினம் உடல்நலமின்றி இறந்தார். இவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அவரது திருவுருவப்படத்திற்கு பொதுமக்கள் மலர்மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும், மெழுகுவர்த்தி கைகளில் ஏந்தியவாறும், மாணவ, மாணவியர், பொதுநல ஆர்வலர்கள் மரியாதை செலுத்தினர்.

இதன் ஒரு கட்டமாக அனைத்து கட்சியினர் சார்பில் ஆனங்கூர் பிரிவு சாலையிலிருந்து, நகராட்சி அலுவலகம் வரை மவுன ஊர்வலம் சி.பி.எம். நகர செயலர் சக்திவேல் தலைமையில் நடந்தது. நகராட்சி அலுவலகம் காந்தி சிலை அருகே வைக்கப்பட்ட சங்கரய்யாவின் திருவுருவப்படத்திற்கு அனைவரும் மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தினர்.

காங்கிரஸ் ஜானகிராமன், தி.மு.க. செல்வராஜ், ஜெயபிரகாஷ், தே.மு.தி.க. நாராயணசாமி, மகாலிங்கம், மக்கள் நீதி மய்யம் சித்ரா, உஷா, தி.க. சரவணன், சி.பி.ஐ. கணேஷ்குமார், வக்கீல் கார்த்தி உள்பட பலர் பங்கேற்று, சங்கரய்யாவின் சாதனைகளை நினைவு கூர்ந்தனர்.

Tags

Next Story