அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
 ஆர்ப்பாட்டம்
கூலி உயர்வு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஆதரவாக அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் கடந்த 13 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஆதரவாக அனைத்து தொழிற்சங்கம் சார்பில் பாடா பிள்ளையார் கோவில் முன்பு நேற்று இரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஊரக வளர்ச்சித் துறை மாவட்ட செயலாளர் சின்னசாமி தலைமை வகித்தார். விசைத்தறி சங்க செயலாளர் ரத்தினவேல், நிர்வாகி சக்திவேல், மாவட்ட செயலாளர் மணிகண்டன், பொருளாளர் மாணிக்கம், தீண்டாமை ஒழிப்பு மாவட்ட தலைவர் சீனி பாண்டி உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தொழிற்சங்கத்தைச் சார்ந்த ஏராளமான விசைத்தறி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story