ரயில் மறியல் போராட்டம் குறித்து அனைத்து தொழிற்சங்கம் ஆலோசனை

ரயில் மறியல் போராட்டம் குறித்து அனைத்து தொழிற்சங்கம் ஆலோசனை

ஆலோசனை கூட்டம் 

அரியலூரில் வரும் பிப்.16 அன்று நடைபெறும் ரயில் மறியல் போராட்டம் குறித்து அனைத்து தொழிற்சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.
அரியலூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனை கூட்டம் அரியலூர் மாவட்ட AITUC அலுவலகத்தில் நடைப்பெற்றது. இதில் AITUC, தொமுச, CITU, INTUC, HMS உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு பிப் -16 ஆம் தேதி நடத்தவுள்ள ரயில் மறியல் போராட்டம் குறித்து கலந்து ஆலோசித்தனர். மேலும் பொதுமக்களுக்கு இதனை விளக்கி கூறும் விதமாக பிப்-10 ஆம் தேதி அண்ணா சிலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் தெருமுனை பிரச்சாரம் செய்ய உள்ளதாக தெரிவிக்கபட்டது குறிப்பிடதக்கது.

Tags

Next Story