அனைத்து சங்க ௯ட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

அனைத்து சங்க ௯ட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

ஆத்தூரில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் வருவாய்துறை அலுவலர்களுக்கு, ஆதரவளிக்கும் வகையில், அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்பாட்டம் நடந்தது.  

ஆத்தூரில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் வருவாய்துறை அலுவலர்களுக்கு, ஆதரவளிக்கும் வகையில், அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்பாட்டம் நடந்தது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டாச்சியர் அலுவலக நுழை வாயிலில் அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் வருவாய்துறை அலுவலர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தலைவர் கலைமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளர் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணியின் அடிப்படையில் விதித்திருத்த ஆணையினை உடனே வெளியிட வேண்டும், அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags

Next Story