ஜோதிமணி மீது எம்.ஆர். விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு

தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க மாட்டேன் என்று சொன்னவர், ஜோதிமணிக்கு தேர்தல் செலவு செய்வதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் குற்றம் சாட்டினார்.

தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க மாட்டேன் என்று சொன்னவர், ஜோதிமணிக்கு தேர்தல் செலவு செய்வதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு. கரூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தங்கவேலுக்கு ஆதரவாக, இன்று கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பகுதிகளில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் வேட்பாளருடன் திறந்த ஜீப்பில் சென்று சின்னத்தம்பி பாளையம், கத்தாளப் பட்டி, மருதம்பட்டி காலனி, பெருமாள்பட்டி காலனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிராமம் கிராமமாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கல்லுமடை அம்மன் நகர் பகுதிக்கு வந்த அவர்களுக்கு கிராம மக்கள் வரிசையாக நின்று ஆரத்தி எடுத்தனர். இதன்பின்பு அங்கு கூடியிருந்த பொதுமக்களிடையே பேசிய முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க மாட்டேன் என கர்நாடகா துணை முதல்வரும், நீர்ப்பாசன துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் தெரிவித்தார். எனக்கூறி ஒரு புகைப்படத்தை பொதுமக்களிடம் காட்டினார்.

அதில் சிவக்குமாருடன் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி உடன் நின்று கொண்டிருக்கிறார். இதே தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதி மணிக்கு இன்று அவர்தான் தேர்தல் செலவு செய்கிறார் என குற்றம் சாட்டினார். இவருக்கு வாக்கு அளித்தால், அவர் கர்நாடகாவுக்கோ, டெல்லிக்கோ சென்று விடுவார். ஆகையால் ஜோதி மணிக்கு போடும் போட்டு நோட்டாவுக்கு போடும் ஓட்டு, ஜோதி மணிக்கு போடும் போட்டு செல்லாத ஓட்டு என்றும், அதுபோன்ற நிலைமை ஏற்படாமல் இருக்க அதிமுக வேட்பாளர் தங்கவேலுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.

Tags

Next Story