குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக குற்றச்சாட்டு !

குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக குற்றச்சாட்டு !

குப்பை

திண்டுக்கல் அருகே சாலை ஓரங்களில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
திண்டுக்கல் ரெயில்வே நிலையத்திலிருந்து எழில் நகர் செல்லும் சாலையில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இங்கு சாலையின் ஓரங்களில் குப்பை கழிவுகள், இறைச்சிக்கழிவுகள், தேங்காய், பிளாஸ்டிக் கேரி பேக்குகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால் இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளில் உள்ள இறைச்சி கழிவுகளை உண்ணுவதற்காக தெரு நாய்களும் அந்த பகுதிகளில் கூட்டம் கூட்டமாக அலைகின்றன. இந்த நேரத்தில் அந்த வழியாக செல்லக்கூடிய மாணவர்கள் மற்றும் பொதுமக்களை நாய்கள் கடிப்பதற்காக துரத்துகின்றன. இதனால் பொதுமக்கள் ஒரு வித பதட்டத்துடன் அந்த சாலையை கடந்து செல்கின்றனர்.

Tags

Next Story