கூட்டணி கட்சியினரும் தாமரை சின்னத்திலேயே போட்டியிடணும் !

எங்களுடன் கூட்டணி அமைப்பவர்கள் தாமரை சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என பா.ஜ., மாநிலத் துணைத் தலைவர் ராமலிங்கம் கூறினார்.

தர்மபுரி பாரதிய ஜனதா கட்சியின் கட்சி அலுவலகம் மற்றும் கொடியேற்று விழாவில் சிறப்பு விருதுநலாக பாஜக மாநில துணை தலைவரும் பெருங்கோட்ட பொறுப்பாளருமான கே.பி ராமலிங்கம் அவர்கள் நேற்று தர்மபுரிக்கு வருகை புரிந்தார் பின்பு விழா முடிவில் செய்தி அவர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் தமிழகத்தில் மக்களுடன் இணைந்து பா.ஜ.க. தேர்தலை எதிர்கொள்கிறது. வடசென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான 39 மக்களவைத் தொகுதிகளிலும் தாமரைச் சின்னத்தில் களம் காண விரும்புகிறோம்.

இந்தியாவின் பிரதமராக மீண்டும் நரேந்திர மோடி வர வேண்டும் என்கிற எங்களது எண்ணங்களை ஏற்றுக் கொண்டு தமிழகத்தில் எங்களுடன் கூட்டணி அமைக்கும் கட்சியினரும் தாமரைச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என விரும்புகிறோம். இதை சில கட்சிகள் ஏற்றுக் கொண்டுள்ளன. வருகிற பிப்.27 மற்றும் 28 ஆகிய 2 நாள்கள் தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரமதர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்த கூட்டங்களிலும் பா.ஜ.க.வுடன் இணைந்து போட்டியிடும் கட்சியினரை காணலாம்.இவ்வாறு கே.பி. ராமலிங்கம் கூறினார்.

Tags

Next Story