குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

குற்றாலம் அருவி 

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் நேற்று உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். இந்தப் பகுதியில் சில நாள்களாக பெய்துவரும் கனமழையால் பேரருவியில் கடந்த 2 நாள்களாக வெள்ளப்பெருக்கு நீடித்தது. ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் திங்கள்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று நீா்வரத்து சீரானதால் அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. பேரருவியில் மத்தியப் பகுதிக்கு செல்லமுடியாதவாறு தடுப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதிகக் கூட்டம் இல்லாததால் சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

Tags

Next Story