அ.தி.மு.க.வில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

அ.தி.மு.க.வில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

திண்டுக்கல், வேம்பார்பட்டியில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தலைமையில், மாற்றுக் கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

திண்டுக்கல், வேம்பார்பட்டியில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தலைமையில், மாற்றுக் கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்துள்ள வேம்பார்பட்டியில் உள்ள முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் இல்லத்தில் மாற்றுக் கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி திங்கட்கிழமை நடந்தது. இதில் முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க.வின் மாநில துணைப் பொதுச்செயலாளரும் நத்தம் விசுவநாதன் முன்னிலையில் நத்தம் தெற்கு ஒன்றியம் ஊராளிபட்டி ஊராட்சி ஏரக்காப்பட்டியை சேர்ந்த ராஜா, செல்வம், ஆகியோர் தலைமையில் லிங்கவாடி, பரளிபுதூர் மற்றும் வேலம்பட்டி ஊராட்சி பகுதிகளை சேர்ந்த மாற்றுக் கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளிலிருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தனர். இவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்து வரவேற்றார்.

Tags

Next Story