திமுக.,வில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

ஊரப்பாக்கத்தில் நடந்த விழாவில், மாற்று கட்சியில் இருந்து பலரும் தி.மு.க.,வில் இணைந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் தனியார் திருமண மண்டபத்தில் இன்று மாற்று கட்சியில் இருந்து திராவிட முன்னேற்ற கழகத்தில் இணையும் விழா மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழாவை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன் தொடங்கி வைத்தார்..

உடன் காஞ்சி நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் மற்றும் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் கலந்து கொண்டனர்..இந்த நிகழ்வில் காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆராமுதன், ஊரப்பாக்கம் ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் மாற்றுக் கட்சியில் இருந்து திமுகவில் இணைந்தவர்கள், திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story