சேத்துப்பட்டு: பாஜகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

சேத்துப்பட்டு: பாஜகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

பாஜகவில் இணைந்த மாற்று கட்சியினர் 

திருவண்ணா மலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டத்துக்கு உள்பட்ட கரிப்பூர் கிராமத்தில் மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகி 50-க்கும் மேற்பட்டோர் பாஜக வில் இணைந்தனர். பாஜக மத்திய அரசு நலத் திட்டப் பிரிவின் மாநிலச் செயலர் சைதை வ.சங்கர் தலைமையில், கரிப்பூர் ஊராட்சி மன்றத் தலைவர் மதியழகன், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாகன ஓட்டுநர் செல்வராஜ் உள்பட 50 பேர் மாற்றுக்கட்சிகளிலிருந்து விலகி பாஜக வில் இணைந்தனர் (படம்). இந்த நிகழ்வில் வடக்கு மாவட்ட பாஜக துணைத் தலைவர் அலமேலு, சுற்றுச் சூழல்பிரிவுதலைவர் தாமோதரன், ஆன்மிகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவுத் தலைவர் சுரேஷ், ஆரணி தெற்கு மண்டல் தலைவர் தேவராஜ், சேட்டு ஜி, வடக்கு மண்டலத் தலைவர் குணாநிதி, இளைஞர் அணி நிர்வாகி ஆறுமுகம், மகளிரணி நிர்வாகி அமுதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story