தாராபுரத்தில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

தாராபுரத்தில்  திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

திமுகவில் இணைந்த அதிமுகவினர் 

திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் தலைமையில் அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூலனூர் பேரூராட்சி 14-வது வார்டு பகுதியைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும் திருப்பூர் நான்காவது மண்டல குழு தலைவர் ஆன இல.பத்மநாபன் தலைமையில் திமுகவில் இணைந்தனர்.

மூலனூர் பேரூராட்சி செயலாளர் மக்கள் தண்டபாணி தலைமையிலும் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மாநில துணை செயலாளர் கார்த்திக் மற்றும் மூலனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் துறை தமிழரசு முன்னிலையில் நடைபெற்றது.

பேரூராட்சி துணை தலைவர் அ. பழனிச்சாமி ஆறாவது வார்டு செயலாளர் செல்வராஜ்,14 வார்டு செயலாளர் குமார், மற்றும் கிறிஸ்டி, பழனி ரமேஷ் மற்றும் பேரூர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story