மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் ஐக்கியம்

மாற்றுக்கட்சியினர்  அ.தி.மு.க.வில் ஐக்கியம்

மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் ஐக்கியம்.

விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. சி.வி சண்முகம் முன்னிலையில் இணைந்தனர்.
விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் விழுப்புரம் நகராட்சி 3-வது வார்டுக்குட்பட்ட சித்தேரிக்கரை பகுதியை சேர்ந்த மாற்றுக்கட்சியினர் 100 பேர், அக்கட்சிகளில் இருந்து விலகி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சி.வி.சண்முகம் எம்.பி. முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். புதியதாக கட்சியில் சேர்ந்தவர்களை சால்வை அணிவித்து சி.வி.சண்முகம் எம்.பி. வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் சக்கரபாணி எம்.எல்.ஏ., நகர செயலாளர்கள் பசுபதி, வண்டிமேடு ராமதாஸ், ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், பேட்டை முருகன், சுரேஷ்பாபு, மாவட்ட மாணவர் அணி செயலா ளர் சக்திவேல், நகர துணை செயலாளர் வக்கீல் செந்தில், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி தலைவர் குமரன்,நகரமன்ற கவுன்சிலர் கோல்டுசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story