அதிமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

பள்ளிபாளையத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியம் ஓடப்பள்ளி பஞ்சாயத்தை சேர்ந்த திமுக மற்றும் நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில், இருந்து சுமார் 40க்கும் மேற்பட்ட இளைஞர்கள் முன்னாள் மின்துறை அமைச்சரும், குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான பி.தங்கமணி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக்கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கு முன்னாள் அமைச்சர் பி.தங்கமணிகட்சி துண்டு அணிவித்து வரவேற்றார் . இந்த நிகழ்வில் பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் எஸ்.செந்தில், பள்ளிபாளையம் நகர செயலாளர் பி.எஸ்.வெள்ளியங்கிரி ,ஒன்றிய கவுன்சிலர் சித்ரா ஐயப்பன் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வின் போது உடன் இருந்தனர்..

Tags

Next Story