முன்னாள் மாணவர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் - அமைச்சர் பங்கேற்பு

திருச்செங்கோடு அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்த முன்னாள் மாணவர்கள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்துகொண்டார்.
திருச்செங்கோடு அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சங்கம் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் PRD. T. T. பரந்தாமன் தலைமையில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியம் முன்னிலையில் நடைபெற்றது, நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக வனத்துறை அமைச்சர் மருத்துவர்.மா. மதிவேந்தன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில், வித்யா விகாஸ் கல்வி நிறுவனங்களின் தாளாளர் டி ஓ சிங்காரவேல் ஆசிரியர், திமுக நகர செயலாளர் கார்த்திகேயன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு, மற்றும் மூத்த முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பள்ளி நூற்றாண்டு விழா சிறப்பாக நடத்துவது, 1921 முதல் படித்த மாணவர்களை ஒன்றிணைப்பது குறித்து பேசப்பட்டது. 200க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் இந்த நிகழ்ச்சிகள் கலந்து கொண்டனர், திருச்செங்கோடு சிவில் இன்ஜினியரிங் அசோசியன் நிர்வாகிகள் நூற்றாண்டு விழா காண பள்ளியின் மாதிரி படத்தை வெளியிட்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைப்பு குழு ஏற்பாடு செய்திருந்தனர்.முன்னாள் மாணவர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் - அமைச்சர் பங்கேற்பு.

Tags

Next Story