இலஞ்சி ஆர். பி. பள்ளியில் பழைய மாணவர்கள் சந்திப்பு

இலஞ்சி ஆர். பி. பள்ளியில் பழைய மாணவர்கள் சந்திப்பு
இலஞ்சி ஆர். பி. பள்ளியில் பழைய மாணவர்கள் சந்திப்பு
தென்காசி மாவட்டம், இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் 1990 ஆம் ஆண்டு பயின்ற மாணவர்களின் சந்திப்பு நிகழ்வு நேற்று பள்ளியில் வைத்து நடைபெற்றது. பள்ளியின் செயலர் சண்முக வேலாயுதம் பிள்ளை, பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர்கள் புன்னைவனம், மாரியப்பன், பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள் மணிமுத்துப் பிள்ளை, பழனி அம்மாள், விஜயலட்சுமி முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினர்.

முன்னாள் மாணவர்கள் 57 பேர் தங்களுடைய சுய விவரங்கள் மற்றும் தற்போதைய பணிநிலை குறித்து விளக்கினர். இந்நிகழ்வினை ஒருங்கிணைத்த மகேஷ்க்கு நண்பர்களுக்கு குழு சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

Tags

Next Story