மத்திய அரசை கண்டித்து அல்வா கொடுக்கும் போராட்டம்

மத்திய அரசை கண்டித்து அல்வா கொடுக்கும் போராட்டம்

அல்வா வழங்கும் போராட்டம் 

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதிபகிர்வுகளை வழங்காமல் இழுத்தடிக்கும் மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் நாசரேத் சந்தி பஜாரில் அல்வா கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

இயற்கை பேரிடர் நிதி, வெள்ள நிவாரண நிதி மற்றும் தமிழ்நாட்டுக்கு முறையாக வழங்க வேண் டிய நிதி பகிர்வுகளை வழங்காமல் தமிழ்நாட்டு மக்களுக்கு அல்வா கொடுத்து ஏமாற்றி வரும் மத்திய மோடி அரசை அம்பலப்படுத்தும் விதமாக நாசரேத் நகர சார்பில் சந்தி பஜாரில் பொதுமக்களுக்கு அல்வா கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு ஆழ்வார் திருநகரி கிழக்கு மத்திய திமுக செயலாளர் நவீன் குமார் தலைமை வகித்தார். ஆழ்வார்திருநகரி மேற்கு மத்திய திமுக செயலாளர் பார்த்திபன், நாசரேத் நகரதிமுக செயலாளர் ஜமீன் சாலமோன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அல்வா கொடுக்கும் நிகழ்வினை தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலை வர் பிரம்மசக்தி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் முன்னாள் நகர திமுக செயலாளர் ரவி செல்வகுமார், நாசரேத் பேரூராட்சி துணைத் தலைவர் அருண் சாமுவேல் என்ற தம்பு, நாசரேத் நகர காங்கிரஸ் தலைவர் செல்வகுமார், திமுக மாவட்ட பிரதிநிதிகள் அன்பு என்ற தங்கபாண்டி யன்,முருகத்துரை, எஸ்.டி.பி. தாமரை செல்வன், பேரூராட்சி வார்டு கவுன்சிலர் சாமுவேல், மூக்குப்பீறி ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் கலையரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story