இருளில் மூழ்கியுள்ள அம்பாள்புரம்

இருளில் மூழ்கியுள்ள அம்பாள்புரம்

இருளில் மூழ்கிய கிராமம்

புதுக்கோட்டை மாவட்டம்,அம்பாள்புரம் பகுதியில் தெருவிளக்குகளை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொன்னமராவதி அருகே இடையாத்தூர் ஊராட்சி அம்பாள்புரத் தில் 100க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக தெரிவிளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் நடமாடமுடியாத அளவிற்கு அம்பாள்புரம் பகுதி இருளில் மூழ்கியுள்ளது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் கண்டுகொள்ளவில்லை என்று கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து ஒன்றிய அலுவலர்கள் உரிய ஆய்வு மேற்கொண்டு தெருவிளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்பாள்புரம் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story