சட்ட மாமேதை அம்பேத்கர் பிறந்தநாள் - அன்பில் மகேஸ் மரியாதை

அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் யொட்டி திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி கிழக்கு தொகுதி இ பி ரோட்டில் அமைந்துள்ள சட்ட மேதை அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து தீண்டாமை ஒழிப்பு சமூக ஏற்றத்தாழ்வுகளை அகற்றும் உறுதிமொழி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் ஏற்கப்பட்டது இந்நிகழ்வில் இந்திய கூட்டணியின் பாராளுமன்ற வேட்பாளர் துரை வைகோ, கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன் மற்றும் மாவட்ட மாநகரக் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story