விருதுநகர்: அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு

விருதுநகர்:  அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு

அம்பேத்கர் நினைவு நாள் 

டாக்டர் அம்பேத்கார் நினைவு தினத்தை முன்னிட்டு அனைத்து கட்சியைச் சார்ந்தோர் மலர்தூவி மரியாதை

பாரத ரத்னா டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 67வது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் அவரது திரு உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதனை முன்னிட்டு இன்று விருதுநகர் தேசபந்து மைதானம் முன்பு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பாக மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சக்திவேல் மற்றும் நகர செயலாளர் செல்வம் தலைமையில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திரு உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும் இந்த நிகழ்சியில் சமூக போராளி ஊர்க்காவலன், தொழிற்சங்க மாவட்ட துணை செயலாளர் ஆற்றல் அரசு, கனகராஜ், மாநில துணைசெயலாளர் ஜோசப், திமுக சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் மதியழகன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் காளி தாஸ், சிபிஎம் நகர செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர் முத்துவேல், தமிழ் புலிகள் கட்சியின் தொழிற்சங்க மாநில செயலாளர் விடியல் வீரபெருமாள் உள்ளிட்ட அனைத்து கட்சியினர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

Tags

Next Story