அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு

பள்ளிபாளையத்தில் சட்டமேதை அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தப் பகுதி அருகே, திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் சரவணன் ,மாவட்ட அமைப்பாளர் முத்துப்பாண்டி ஆகியோர் நிகழ்விற்கு முன்னிலை வகித்தனர். நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்பேத்கர் அவர்கள் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பு சார்பில் நடைபெற்ற அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தின நிகழ்ச்சியில், மதிமுக ,சிபிஎம் உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் சமூக நீதி கூட்டமைப்பினர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் . பலர் பங்கேற்றனர்

Tags

Next Story