திமுக சார்பில் அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு

திமுக சார்பில் அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு

தர்மபுரி திமுக கலை இலக்கிய பேரவை சார்பில் அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

தர்மபுரி திமுக கலை இலக்கிய பேரவை சார்பில் அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
தர்மபுரி மாவட்டம், 06/12/2023. திமுக கலை இலக்கிய பேரவை சார்பில் அம்பேத்கார் நினைவு நாள் அனுசரிப்பு. சட்ட மாமேதை அம்பேத்கார் 67வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பலரும் அம்பேத்கார் நினைவு தினத்தில் திருவுருவ சிலைக்கும் படத்திற்கும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தியும் வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திமுகவின் தலைமை கழக பேச்சாளரும், தருமபுரி மேற்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் மாவட்ட துணை தலைவர் பாடகர்.எஸ்.மணி ,அரூர் கச்சேரி மேடு சாலை சந்திப்பில் உள்ள அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் உலக பசுமை பாதுகாப்பு கட்சி நிறுவனர் டாக்டர்.பசுமை சீனிவாசன், மணிமேகலை, உடனிருந்தனர்.

Tags

Next Story