ராசிபுரத்தில் விசிகவினர் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை

ராசிபுரத்தில் விசிகவினர் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை

மரியாதை செய்த விசிகவினர்

ராசிபுரத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வீரவணக்கம் செய்தனர்.

நாமக்கல் கிழக்கு மாவட்டம் ராசிபுரத்தில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரின் அவர்களின் 134.வது பிறந்தநாள் விழா ராசிபுரம் சுவாமி சிவானந்தா சாலை பகுதியில் உள்ள கிழக்கு தெருவில் அமைந்துள்ள அம்பேத்கர் அவர்களின் முழு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வீரவணக்கம் புகழஞ்சலி கோஷங்கள் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட துணை அமைப்பாளரும் மற்றும் ராசிபுரம் நகர மன்ற உறுப்பினருமான பழனிச்சாமி, தலைமை வகித்தார். நிகழ்வில் தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் கனகராஜ் ,ராசிபுரம் தொகுதி அமைப்பாளர் கண்ணன் ,

ராசிபுரம் நகர அமைப்பாளர் குமார், ராசிபுரம் நகர துணை செயலாளர் கேசவன், நகர பொறுப்பாளர் பாலு ,நகர பொறுப்பாளர் விஜயகுமார், உள்ளிட்ட ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி உற்சாகமாக அவரது பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்.

Tags

Next Story