அம்பேத்கரின் 133வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

சத்தியமங்கலத்தில் ஆதித்தமிழர் பேரவை சார்பாக அம்பேத்கரின் 133வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடந்தது.

ஆதித்தமிழர் பேரவை ஈரோடு வடக்கு மாவட்டம் சத்தியமங்கலம் அலுவலகத்தில் அரசியலமைப்பின் தந்தை புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 134 வது பிறந்த நாளில் அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை நிமிர்த்தம் செய்யப்பட்டது. அம்பேத்கர் கொள்கையின் தத்துவவாதங்களை அனைத்து கிராமங்களுக்கும் எடுத்து செல்வோம் மேலும் அனைத்து இடங்களிலும் அவரது உருவச் சிலைகள் அமைப்பதற்கு தமிழ்நாடு கவனத்திற்கு செல்லும் வரை நம் களத்தில் முழக்கங்களை இடுவோம் என்று இந்த இனிய நாளில் நம் அனைவரும் உறுதி ஏற்போம்..!

இந்த மாலை அணிவிப்பு நிகழ்ச்சியில்.. பெ.பொன்னுசாமி மாவட்ட செயலாளர் இரா.குருநாதன், மாவட்ட தலைவர் பொ.குமுதா உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story