ஆட்சியர் அலுவலகத்தில் அம்பேத்கரின் 67 வது நினைவு தினம் அனுசரிப்பு

ஆட்சியர் அலுவலகத்தில் அம்பேத்கரின் 67 வது நினைவு தினம் அனுசரிப்பு

அண்ணல் அம்பேத்கர் நினைவு தினம் 

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அம்பேத்கரின் 67 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டாக்டர் அம்பேத்கரின் 67வது நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் சக துறையை சார்ந்த அரசு அலுவலர்கள் உடன் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர் இதனைத் தொடர்ந்து சக அரசு துறை சார்ந்த அலுவலர்களிடம் உரையாற்றிய மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்.. ஜாதியை தூக்கிப் பிடித்துக் கொண்டு போராடுவதை விட மனிதர்கள் என்று வருகின்ற பொழுது மனிதர்கள் பக்கம் நின்று பக்குவத்தோடு அனைவரிடமும் அன்பு காட்ட வேண்டும் எல்லா மதங்களும் அதைத்தான் சொல்கிறது. நம்முடைய உடலுக்குள் இருக்கின்ற உயிரை உணர வேண்டும் என்றால் மனிதர்களை நேசிக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கருத்துகளை எடுத்துக் கூறி உரையாற்றினார். இந்நிகழ்வின் போது வருவாய் கோட்டாட்சியர் வளர்மதி. சார் ஆட்சியர் பானு.வட்டாட்சியர் சிவப்பிரகாசம்உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story