ராசிபுரத்தில் விசிக சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாட்டம்

ராசிபுரத்தில் விசிக சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாட்டம்

அம்பேத்கர் சிலைக்கு மரியாதை

ராசிபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ராசிபுரத்தில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் மும்பை அர்ஜுன் அவர்கள் தலைமை வகித்தார். ராசிபுரம் நகர செயலாளர்கள் சுகுவளவன், பிரபு முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ராசிபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் செல்வநிலவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் கோபிநாத், ராமன், அருணாச்சலம் , பட்டணம் பேரூர் செயலாளர் இளையராஜா,

உள்ளிட்ட ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் கோஷங்கள் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து மாவட்ட கழக செயலாளர் மும்பை அர்ஜுன் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார்.

Tags

Next Story