விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

நலத்திட்ட உதவிகள் வழங்கல் 

திருவேங்கடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடத்தில் உள்ள காந்தி மண்டபம் முன்பு புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவே முன்னிட்டு அவருடைய திருவுருவப் படத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் குருவிகுளம் ஒன்றிய செயலாளர் கனியமுதன் மற்றும் திருவேங்கடம் நகர செயலாளர் சிவக்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது,

இந்த அம்பேத்கர் பிறந்த தின விழாவை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்புக், பேனா, பென்சில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தை கட்சியின் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் லிங்க வளவன். தென் மண்டல துணைச் செயலாளர் குழந்தை வளவன், தென்காசி வழக்கறிஞர் ஜெயக்குமார், டாஸ்மார்க் தொழிலாளர் விடுதலை முன்னணி அமைப்பாளர் முருகன் உள்ளிட்ட ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story