ஆத்தூரில் நகராட்சி அலுவலக குப்பைக்கு நடுவே அம்பேத்கர் படம்

ஆத்தூரில் நகராட்சி அலுவலக குப்பைக்கு நடுவே அம்பேத்கர் படம்

குப்பைகள் நடுவே வைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் படம் 

ஆத்தூர் நகராட்சி அலுவலக வளாகப் பின்பகுதியில் குப்பை கிடக்கும் இடத்தில் அம்பேத்கர் படம் வைக்கப்பட்டுள்ளது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி அலுவலக பின் பகுதியில் குப்பை மற்றும் மது பாடடில்கள் அடங்கிய குப்பைகளுக்கு நடுவே சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் திருவுருவப்படம் வைத்துள்ளனர்.

இச்சம்பவம் தற்போது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags

Next Story