நாமக்கல் : கால்நடை ஆம்புலன்ஸ் பணிக்கு ஜூன் 9ம் தேதி இன்டர்வியூ!

நாமக்கல் : கால்நடை ஆம்புலன்ஸ் பணிக்கு ஜூன் 9ம் தேதி இன்டர்வியூ!

ஆம்புலன்ஸ் டிரைவர்

கால்நடை மருத்துவமனை வசதி இல்லாத கிராமங்களிலும் கூட, ‘1962’ எனும் இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டால், மருத்துவ வசதி தேவைப்படும் இடத்திற்கே மருத்துவ ஊர்தி அனுப்பி வைக்கப்படும்.

நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ் பணிக்கான நேர்முகத்தேர்வு வருகிற ஜூன் 9ம் தேதி, நாமக்கல்லில் நடைபெறுகிறது. தமிழக அரசின் ‘1962’ இலவச கால்நடை மருத்துவ ஊர்தி சேவை திட்டம், அவசர சிகிச்சை தேவைப்படும் கால்நடைகளின் உயிரைக் காக்கும் நோக்கத்தோடு, கடந்த 2016ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

முதலில் 5 மாவட்டங்களில் மட்டும் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம், தற்போது தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவமனை வசதி இல்லாத கிராமங்களிலும் கூட, ‘1962’ எனும் இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டால், மருத்துவ வசதி தேவைப்படும் இடத்திற்கே மருத்துவ ஊர்தி அனுப்பி வைக்கப்படும். இந்த மருத்துவ ஊர்திகளில் ஒரு கால்நடை மருத்துவர், கால்நடை உதவியாளர், டிரைவர் ஆகியோர் தயார் நிலையில் இருப்பார்கள். இந்த வாகனங்கள் காலை 8 முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படும்.

அவசர சிகிச்சைக்காக 24 மணி நேரமும்தொடர்பு கொள்ளலாம். கால்நடைகள் இருக்கும் இடத்திலேயே அவசர சிகிச்சை வழங்கும் வகையில், தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் ஆகியவை இந்த வாகனங்களில் இருக்கும். நடக்க இயலாத கால்நடைகளை வாகனத்தில் ஏற்றுவதற்காக ‘ஹைட்ராலிக் லிப்ட்’ பொருத்தப்பட்டுள்ளது. மின்சார வசதியில்லாத இடத்தில் கூட இரவு நேரங்களில் சிகிச்சை அளிப்பதற்காக, வாகனத்துக்கு வெளியே ஜெனரேட்டர் மூலம் செயல்படக்கூடிய பெரிய விளக்கு பொருத்தப்பட்டுள்ளது.

இந்த கால்நடை ஆம்புலன்ஸ் சேவைக்கான டிரைவர் மற்றும் உதவியாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு வருகின்ற ஜூன் 9ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை, நாமக்கல் மோகனூர் ரோட்டில் அமைந்துள்ள பழைய அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள, 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.

டிரைவருக்கான தகுதிகள்: 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 24 முதல் 35க்கு மிகாமல் இருக்க வேண்டும். உயரம் 162.5 செ.மீ இருக்க வேண்டும். டிரைவிங் லைசென்ஸ் பெற்று 3 ஆண்டுகளும் பேட்ஜ் எடுத்து ஒரு ஆண்டும் நிறைவு பெற்று இருக்க வேண்டும். ஆம்புலன்ஸ் உதவியாளர்க்கான தகுதிகள்: 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், வயதுவரம்பு 19 முதல் 30க்கு மிகாமல் இருக்க வேண்டும். நேர்முகத் தேர்வுக்கு வரும் அனைவரும் அசல் சான்றிதழை எடுத்து வரவேண்டும். இவ்வாறு கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸ் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story