கள்ளக்காதலியின் கையை உடைத்த ஆம்புலன்ஸ் டிரைவர் கைது

கள்ளக்காதலியின் கையை உடைத்த ஆம்புலன்ஸ் டிரைவர் கைது

காவல் நிலையம் 

தாராபுரத்தில் கைக்குழந்தையுடன் நியாயம் கேட்க வந்த கள்ளக்காதலியின் கையை உடைத்த ஆம்புலன்ஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

தாராபுரம் பாத்திமா நகரை சேர்ந்தவர் சையது என்கிற சிராஜ் வயது 52. ஆம்புலன்ஸ் டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகனுக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 36 வயதுடைய பெண்ணின் கணவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட போது சிராஜ் தனது ஆம்புலன்ஸ் மூலம் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தார்.

அப்போது உடல் நலம் பாதிக்கப்பட்டவரின் மனைவிக்கும் சிராஜுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. சிறிது காலத்திற்குப் பிறகு அந்த பெண்ணின் கணவர் இறந்து விட்டார். அதன் பின்னர் சிராஜ் அந்த பெண்ணுக்கு அனைத்து உதவிகளும் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் கர்ப்பம் அடைந்து ஆறு மாதங்களுக்கு முன்பு குழந்தை பெற்றார்.

பின்னர் அந்த பெண்ணை சிராஜ் சந்திக்க போகாமல் நிறுத்திவிட்டார். இதை அடுத்து அந்த பெண் நேற்று சிராஜை சந்தித்து நியாயம் கேட்க கைக்குழந்தையுடன் தாராபுரம் வந்தார். இதில் ஆத்திரம் அடைந்த சிராஜ் அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் கை உடைந்தது. அந்தப் பெண்ணை அருகில் இருந்தவர்கள் விட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர் செந்தில் குமார் வழக்கு பதிவு செய்து சிராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story