கிணற்றில் விழுந்த மூதாட்டி பத்திரமா மீட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்கள்

கிணற்றில் விழுந்த மூதாட்டி  பத்திரமா மீட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்கள்
ஜெயங்கொண்டம் அருகே கிணற்றில் விழுந்த மூதாட்டியை பொதுமக்கள் உதவியுடன் பத்திரமா மீட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்கள்
ஜெயங்கொண்டம் அருகே கிணற்றில் விழுந்த மூதாட்டியை பொதுமக்கள் உதவியுடன் பத்திரமா மீட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது

ஜெயங்கொண்டம் அருகே தண்ணியில்லா கிணற்றில் விழுந்த மூதாட்டியை பொதுமக்கள் உதவியுடன் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பத்திரமாக மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வானமாதேவி மெயின் ரோடு தெருவை சேர்ந்தவர் பாக்கியராஜ். இவரது மனைவி செல்வி. 80 வயது மூதாட்டியான இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு ஊர் ஊராக சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பெரியபாளையம்- கடாரம் கொண்டான் செல்லும் சாலையில் அமைந்துள்ள கொடப்பேரி அருகே மூதாட்டி செல்வி நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்குள்ள தண்ணி இல்லா கிணற்றில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது மூதாட்டி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். பின்னர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக சம்பவ இடத்திற்கு நிறைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், தண்ணியில்லா கிணற்றில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மூதாட்டியை பொதுமக்கள் உதவியுடன் பத்திரமாக மீட்டு வெளியில் கொண்டு வந்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உடனடியாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு மூதாட்டி சிகிச்சை பெற்று வருகிறார். கிணற்றில் விழுந்த மூதாட்டிக்கு கையில் லேசாக முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் உதவியுடன் மூதாட்டியை பத்திரமாக மீட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story