வெள்ளகோவில்: ஆம்புலன்ஸ் மோதி பெண் பலி

வெள்ளகோவில் அருகே ஆம்புலன்ஸ் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

வெள்ளக்கோவில் புதுப்பையைச் சேர்ந்தவர் மலையப்பன் இவருடைய மனைவி முத்துமணி (வயது 57). இவர் இரட்டைக்கிணற்றில் உள்ள தனியார் பிஸ்கட் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தம்பதி இருவரும் வெள்ளகோவில் மூலனூர் சாலையில் உள்ள கரட்டுப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது வெள்ளகோவில் நோக்கி வந்த தனியார் ஆம்புலன்ஸ் தம்பதி மீது மோதியது. இதில் முத்துமணி தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். மலையப்பனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முத்துமணியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். மலையப்பனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஆய்வாளர் ஞானப்பிரகாசம் உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் ஆகியோர் வெள்ளகோவில் சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் மனோஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story