ஆம்பூர் : தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 பேர் கைது

ஆம்பூர் :  தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 பேர் கைது

கைது செய்யப்பட்டவர்களுடன் போலீசார் 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட மூன்று பேர் கைது. நான்கு செல்போன்கள், இருசக்கர வாகனம் பறிமுதல்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு பகுதியில் உள்ள பெங்களூரு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு ஆம்பூர் பகுதியை சேர்ந்த அஸ்லாம் பாஷா என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் அஸ்லாம் பாஷாவை தாக்கிவிட்டு அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணம் ஆகியவற்றை பறித்து சென்றனர்.,

இது குறித்து அஸ்லாம்பாஷா அளித்த புகார் அடிப்படையில் ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து வழிப்பறி கொள்ளையர்களை தேடிவந்த நிலையில் வெங்கிலி பகுதியில் இருசக்கர வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அப்பகுதி வழியாக வேகமாக இரு சக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்களை மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் மூவரும் வாணியம்பாடி கோனாமேடு பகுதியைச் சேர்ந்த பசுபதி, மாதவன், வசந்த் ,என்பதும் இவர்கள் மூவரும் தொடர்ந்து சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் செல்போரை குறி வைத்து தாக்கி செல்போன் மற்றும் பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் மூவரையும் கைது செய்த காவல் துறையினர் அவர்களிடம் இருந்து நான்கு செல்போன்கள் மற்றும் திருட்டில் பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story