ஆம்பூர் : கொத்தடிமைகளாகப் பணியாற்றிய குழந்தைகள் உட்பட 4பேர் மீட்பு

ஆம்பூர் : கொத்தடிமைகளாகப் பணியாற்றிய  குழந்தைகள் உட்பட 4பேர் மீட்பு

குழந்தைகள் உட்பட 4 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு

ஆம்பூர் அருகே செங்கல் சூளையில் 2 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக பணியாற்றி வந்த கணவன் மனைவி மற்றும் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் மீட்கப்பட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பைரப்பள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாக சிலர் பணியாற்றி வருவதாக வாணியம்பாடி வருவாய் கோட்டாச்சியர் பிரேமலதாவிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் பைரப்பள்ளி பகுதியிற்கு விரைந்த அரசு அதிகாரிகள் அங்கு நாகராஜ் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் ஆய்வு மேற்க்கொண்ட போது வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த குப்பம்பட்டு பகுதியை சேர்ந்த கணவன் மனைவியான சத்தீஷ், சங்கீதா மற்றும் அவர்களது 2 ஆண் குழந்தைகள் கடந்த 2 ஆண்டுகளாக செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்தது தெரியவந்தது. பின்னர் 4 பேரையும் மீட்ட கோட்டாச்சியர் தலைமையிலான அதிகாரிகள் மீட்டு அவர்களை ஆம்பூர் வட்டாச்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று அவர்களுக்கு புதிய வங்கி கணக்கு துவங்கி வங்கி கணக்கில் 30 ஆயிரம் ரூபாய் செலுத்தி அவர்களின் சொந்த ஊருக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story