காரைக்குடியில் இரட்டை இலை சின்னத்தை காண்பித்த அமித்ஷா

காரைக்குடியில் இரட்டை இலை சின்னத்தை காண்பித்த அமித்ஷா

காரில் பயணித்த அமித்ஷா

காரைக்குடியில் செய்திகளை பார்த்து அமித்ஷா இரட்டையிலை சின்னத்தை காண்பித்தது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்குடி அருகே செட்டிநாடு விமான தளத்தில் வந்து இறங்கிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்றார்.

பின்னர் சாலை வழியாக பலத்த பாதுகாப்புடன் காரில் புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் உள்ள கோவிலில் வழிபாடு செய்வதற்காக பயணமானார். அப்போது விமான நிலையத்திலிருந்து வெளியே வரும் போது செய்தியாளர்களைப் பார்த்து வெற்றியின் சின்னமாக இரட்டை இலை சின்னத்தை காட்டியவாறு அமித்ஷா கையசைத்துச் சென்றார்.

இதைப் பார்த்த செய்தியாளர்கள் இரட்டை இலை சின்னத்தை காண்பித்தாரா தேர்தலில் வெற்றி பெறுவோம் என வெற்றி சின்னத்தை காண்பித்தாரா எனக் குழம்பிப் போகினர். ஏற்கனவே அதிமுகவினர் ஜெயலலிதாவின் பெயரை அண்ணாமலை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,

அமித்ஷா இரட்டை இலை சின்னத்தை காண்பித்தவாறு சென்றது தமிழக அரசியலில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

Tags

Next Story