ஓபிசி பெண்களை அவமதிக்கும் அமித்ஷா - எம்பி மாணிக்கம் தாகூர்

ஓபிசி பெண்களை அவமதிக்கும் அமித்ஷா - எம்பி மாணிக்கம் தாகூர்

எம்பி மாணிக்கம் தாகூர் 

ஓபிசி பெண்களுக்கு அவமரியாதை செய்வதில் அமித்ஷா அவர்களின் உண்மையான நோக்கம் தெளிவாகத் தெரிகிறது என விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளார்.
ஆந்திராவில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவின் போது மேடையில் அமர்ந்திருந்த அமித்ஷா, தமிழிசை சௌந்தரராஜனிடம் கோபமாக பேசும் வீடியோ ஒன்று ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதை டேக் செய்து விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் ஒரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார் அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: இது பெண்களுக்கு எதிரான ஷாவின் மனநிலையை வெளிப்படுத்துகிறது. அவர் பெண்களை மதிப்பதில்லை; மாறாக, அவர்களை அவமதிக்கிறார்கள். OBC பெண்களுக்கு அவமரியாதை செய்வதில் அவர்களின் உண்மையான நோக்கம் தெளிவாகத் தெரிகிறது. அமித்ஷா முதலில் நாடார் பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அந்த ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

Tags

Next Story