சிவகாசியில் அம்மன் காமதேனு வாகனத்தில் வீதி உலா

சிவகாசியில் அம்மன் காமதேனு வாகனத்தில் வீதி உலா

சிவகாசி ஸ்ரீமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் 2 ஆம் திருவிழாவை முன்னிட்டு,அம்மன் காமதேனு வாகனத்தில் வீதி உலா வந்து அருள்பாலித்தார்.


சிவகாசி ஸ்ரீமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் 2 ஆம் திருவிழாவை முன்னிட்டு,அம்மன் காமதேனு வாகனத்தில் வீதி உலா வந்து அருள்பாலித்தார்.

சிவகாசி ஸ்ரீமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் 2ஆம் திருவிழா.அம்மன் காம் தேனு வாகனத்தில் புறப்பாடு நடந்தது. விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப் பண்டுக்கு சொந்தமான ஸ்ரீமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா,31 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.

2 ஆம் திருவிழா ஸ்ரீமாரியம்மன் 'காமதேனு 'வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.மேலும் பங்குனி பொங்கல் திருவிழா, வரும் ஏப்ரல் 7ம் தேதி (ஞாயிறு கிழமை) நடைபெறுகிறது.8ம் தேதி (திங்கள் கிழமை) கயறுகுத்து மற்றும் அக்னிச்சட்டி திருவிழா நடைபெறுகிறது.

பங்குனி பொங்கல் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் திருவிழா, வரும் 9ம் தேதி (செவ்வாய் கிழமை) மாலை நடைபெறுகிறது. பங்குனி பொங்கல் திருவிழா நடைபெறும் நாட்களில் தினமும் இரவு, ஸ்ரீமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறும். திருவிழா ஏற்பாடுகளை, சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டு தேவஸ்தான நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Tags

Next Story