மாசி திருவிழாவை முன்னிட்டு அம்மன் வீதி உலா

மாசி திருவிழாவை முன்னிட்டு அம்மன் வீதி உலா

மாசி திருவிழா 

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மாரியம்மன் மாசி திருவிழாவை முன்னிட்டு அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்று நடந்து வரும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவில் மாசிப் பெருந்திருவிழாவின் 11-ம் நாள் நிகழ்ச்சியான இன்று அன்ன வாகனத்தில் சரஸ்வதி அலங்காரத்தில் வீதிகள் உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்நிலையில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்க காப்பு கட்டி உள்ளனர். தீர்த்த குடம் எடுப்பதற்கும் சிலர் காப்பு கட்டி உள்ளனர். இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. போலீசாரும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

Tags

Next Story