கைலாச பர்வத வாகனத்தில் அம்மன் வீதி உலா

சிவகாசி ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலில் சித்திரை 3ஆம் திருவிழாவை முன்னிட்டு கைலாச பர்வத வாகனத்தில் அம்மன் வீதி உலா நடந்தது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா உற்சாகமாக நடைபெற்று வருகிறது. 3ம் திருவிழாவை முன்னிட்டு, ஸ்ரீபத்திரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில்,கடைக் கோவிலில் எழுந்தருளினார்.

இதனை தொடர்ந்து இரவு, ஸ்ரீபத்திரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில்'கைலாச பர்வத' வாகனத்தில் எழுந்தருளி வாண வேடிக்கையுடன் வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை,சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டு தேவஸ்தான நிர்வாகிகள் மற்றும் நிகழ்ச்சி உபயதாரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story