அ.ம.மு.க. சார்பில் பள்ளி மாணவிக்கு நிதியுதவி!

அ.ம.மு.க. சார்பில் பள்ளி மாணவிக்கு நிதியுதவி!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த பள்ளி மாணவிக்கு அ.ம.மு.க. சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது .


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த பள்ளி மாணவிக்கு அ.ம.மு.க. சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது .
வேலூர் காட்பாடியை அடுத்த வள்ளிமலை அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவி ஆர்.ஜானவி பள்ளியில் முதலிடம் பிடித்தார். இந்த நிலையில் அ.ம.மு.க. சார்பில் மண்டல பொறுப்பாளரும், ராணிப்பேட்டை மாவட்ட செயலாளருமான என்.ஜி.பார்த்திபன் வழிகாட்டுதல் பேரில் காட்பாடி மத்திய ஒன்றிய செயலாளர் பி.பாபு, மாணவி ஜானவிக்கு பொன்னாடை அணிவித்து, ரூ.10 ஆயிரம் நிதியுதவி மற்றும் இனிப்புகள் வழங்கி பாராட்டினார். அப்போது மாவட்ட துணை செயலாளர் ஜெ.மஞ்சு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் எம்.பி.ஏழுமலை, மாவட்ட விவசாய அணி துணைத்தலைவர் எம்.எஸ்.கார்த்திகேயன், ஒன்றிய இணை செயலாளர் என்.சத்தியராஜ், ஊராட்சி செயலாளர் ஜெ.பிரின்ஸ், தினகரன், குணபிரசாத், கிளை செயலாளர் பிரபு ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story