உசிலம்பட்டியில் 8 வயது சிறுமி மர்ம காய்ச்சலால் உயிரிழப்பு!

உசிலம்பட்டியில் 8 வயது சிறுமி மர்ம காய்ச்சலால் உயிரிழப்பு!

உயிரிழந்த சிறுமி 

உசிலம்பட்டியில் 8 வயது சிறுமி மர்ம காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
உசிலம்பட்டியில் 8 வயது சிறுமி மர்ம காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சத்யா நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் முத்து கணேஷ்-நதியா தம்பதியினர்.முத்து கணேஷ் ஆக்டிங் டிரைவராக உள்ள நிலையில் இவர்களுக்கு 2 பெண்கள் குழந்தைகள் உள்ளனர்.இவரது மூத்த மகள் ஹர்சிதா (8) கடந்த இரு தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டதால் பெற்றோர்கள் தனியார் மருத்துவ மணையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.அங்கு குழந்தை உடல் நிலை மேலும் மோசமடைந்ததால் மருத்துவர்கள் உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர்.இன்று காலையில் உசிலம்பட்டி அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து உசிலம்பட்டி போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.8 வயது குழந்தை மர்ம காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் உசிலம்பட்டிப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.

Tags

Next Story