அரியலூர் அருகே மின்கம்பத்தில் மோதி கோர விபத்து

அரியலூர் அருகே மின்கம்பத்தில் மோதி கோர விபத்து

விபத்தில் சிக்கிய பேருந்து

அரியலூர் அருகே மின்கம்பத்தில் மோதி தனியார் பேருந்து கோர விபத்து உயிர் தப்பிய பயணிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர், ஜூன்.16- அரியலூர் அருகே மின் கம்பத்தில் மோதி சாலையை விட்டு வயலில் இறங்கிய தனியார் பேருந்து அதிர்ஷ்டவசமாக பஸ்ஸில் பயணம் செய்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் உயிர் தப்பித்தனர் தஞ்சாவூரில் இருந்து திருமானூர் திருமழபாடி மார்க்கமாக திருச்சி வரையில் தினசரி பேருந்து சேவையை ஸ்ரீ பாலாஜி என்ற தனியார் பேருந்து வழங்கி வருகிறது.

இந்நிலையில் தஞ்சாவூரில் இருந்து திருச்சி நோக்கி இன்று காலை சென்ற தனியார் பேருந்து அரியலூர் மாவட்டம் திருமழபாடி அருகே உள்ள புதுக்கோட்டை கிராம பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு சிறிது தூரம் சென்ற பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி வயல் பகுதியில் இறங்கியது.

இதனால் பேருந்து முன் கண்ணாடி உடைந்தது எனினும் பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தப்பித்தனர் மின் கம்பத்தில் மோதி அங்கேயே பேருந்து நின்றிருந்தால் பெரும் ஆபத்து நேர்ந்திருக்கும் டிரைவர் திறமையால் அந்த இடத்திலிருந்து சிறிது தூரம் சென்று வயல்வெளியில் இறங்கியதால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து திருமானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Tags

Next Story