ஓவியத்தில் சாதனை படைத்த மாணவன்

சிவகாசியில் 19 முட்டையில் 19 தேசிய தலைவர்களின் படத்தை ஓவியமாக வரைந்து பள்ளி மாணவர் சாதனை படைத்துள்ளார்.

சிவகாசி பள்ளி மாணவன் சாதனை .... ஒரு மணி நேரத்தில் 19 முட்டையில் 19 தேசிய தலைவர்களின் படம் வரைந்து சாதனை... விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள அதிவீரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களது மகன் சரண்சந்ரேஷ் (12). இவர் திருத்தங்கல் லயன்ஸ் மெட்ரிக் பள்ளியில் 7 வகுப்பு படித்து வருகிறார். மாணவர் சரண்சந்ரேஷிற்கு ஓவியம் வரைவதில் மிகுந்த ஈடுபாடு உண்டு. பார்க்கும் அனைத்தையும் ஓவியமாக தீட்டி, பலரது பாராட்டுகளையும் பரிசுகளையும் குவித்துள்ளார்.

மேலும், மாணவர் சரண்சந்தோஷ் தான் படிக்கும் பள்ளி வளாகத்தில் வைத்து ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் மற்றும் மாணவ, மாணவிகள் மத்தியில் 19 முட்டையில் 19 தேசிய தலைவர்கள் படங்களை ஓவியமாக வரைந்து சாதனை படைத்து உள்ளார். இதில் காந்தி, காமராஜர், வ.உ.சி சிதம்பரம் பிள்ளை, அப்துல் கலாம், இந்திரா காந்தி, நேரு போன்ற தேசிய தலைவர்களின் படத்தை ஓவியமாக வரைந்துள்ளார். மாணவர் சரண்சந்ரேஷிற்கு பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் சார்பாக பரிசுகள் வழங்கி பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் கூறினர்.

Tags

Next Story