குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் தற்கொலை

குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் தற்கொலை
குடிப்பழக்கத்திற்கு அடிமையான நபர் தூக்கிட்டு தற்கொலை
விருதுநகர் மாவட்டம், நெடுங்குளம் பகுதியில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு தாலுகா நெடுங்குளம் பகுதியைச் சார்ந்தவர் வீமாராஜா வயது 47 இவரது மனைவி அமஞ்சி அம்மாள் வயது 44 வீமா ராஜா மது பழக்கத்திற்கு அடிமையானதால் வயிற்று வலி வந்து அவதிப்பட்டு வந்ததாகவும் இந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் தனது மனைவியின் தாய் வீட்டில் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு செல்வதாக கூறி விட்டுச் சென்றதாகவும் அதைத்தொடர்ந்து சிறிது நேரம் கழித்து வீமராஜாவின் மகள் வீட்டிற்கு சென்ற பொழுது வீட்டில் இருந்த கட்டையில் வீமாராஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதை அடுத்து இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி கூமாபட்டி காவல் நிலையத்தில் அமச்சியம்மாள் அளித்த புகாரி அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story