அழிந்து வரும் நாடகக் கலையை மீட்டெடுக்கும் முயற்சி

அழிந்து வரும் நாடகக் கலையை மீட்டெடுக்கும் முயற்சி

ஸ்ரீ மதுரை வீரன் ஆலய வைகாசி திருவிழாவில் அரங்கேற்றப்பட்ட அரிச்சந்திர மயான காண்டம் நாடகத்தை பொதுமக்கள் விடிய விடிய கண்டு ரசித்தனர்.


ஸ்ரீ மதுரை வீரன் ஆலய வைகாசி திருவிழாவில் அரங்கேற்றப்பட்ட அரிச்சந்திர மயான காண்டம் நாடகத்தை பொதுமக்கள் விடிய விடிய கண்டு ரசித்தனர்.

அழிந்து வரும் நாடகக் கலையை மீட்டெடுக்கும் முயற்சியில் மாவிலங்கை கிராமம்: ஸ்ரீ மதுரை வீரன் ஆலய வைகாசி திருவிழாவில் அரங்கேற்றப்பட்ட அரிச்சந்திர மயான காண்டம் நாடகத்தை பொதுமக்கள் விடிய விடிய கண்டு ரசித்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் த கீழ்வேளூர் ஒன்றியம் ஆதமங்கலம் ஊராட்சி மாவிலங்கை கிராமத்தில் ஸ்ரீ மதுரை வீரன் உடனுறை வெள்ளையம்மாள் பொம்மியம்மாள் மற்றும் பெரியநாயகி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

இக்கோயிலின் இரண்டாம் ஆண்டு வைகாசி திருவிழா கடந்த ஜூன் 5ஆம் தேதி காப்பு கட்டுதலோடு துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று ஜூன்13 மதுரை வீரனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து இரவு அழிந்து வரும் பாரம்பரிய நாடகக் கலையை மீட்டு எடுக்கும் வகையில் அரிச்சந்திர மயான காண்டம் நாடகம் அரங்கேற்றப்பட்டது. கோயில் திருவிழாக்களில் பெருமளவு ஆடல் பாடல் , இன்னிசை பட்டிமன்றங்கள் மட்டுமே நடத்தப்படுகிறது.

இருப்பினும் மாவிலங்கை கிராமத்தில் நாடகக் கலையின் பெருமையை எடுத்துரைக்கும் வகையிலும் அதனை மீட்டு இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் வகையில் நடத்தப்பட்ட நாடக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அரிச்சந்திரன், சந்திரமதி, விஸ்வாமித்திரன், சத்திய கீர்த்தி, உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் நாடகக் கலைஞர்கள் நடித்து தங்களுடைய கலைத்திறமையை வெளிப்படுத்தியது பார்ப்போர் கண்களுக்கு விருந்து படைக்கும் வகையில் அமைந்தது. விடிய விடிய சுமார் 7 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற நாடக நிகழ்வினை கிராம மக்கள் கண்டு ரசித்தனர். நாடகத்தின் நிறைவாக நடைபெற்ற பட்டாபிஷேக நிகழ்வில் திரளான கிராம மக்கள் இளைஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அரிச்சந்திரன் ஆக மன்னை நடிகர் சங்கத் தலைவர் பைங்காட்டூர் தங்க.கிருஷ்ணமூர்த்தி, சந்திரமதியாக புதுக்கோட்டை எம். எஸ்.ஈஸ்வரி, விஷ்வா முத்திரன். காலகண்டையராக மன்னை ஆர். சி‌. சண்முகசுந்தரம், சத்திய கீர்த்தியாக நிம்மேலி இராமையன், பபுனாக சிங்கை. சிவா உள்ளிட்டோர் அடங்கிய நாடக குழுவினரால் நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் விழா குழு நிர்வாகிகளான என். சரவணன், பக்கிரிசாமி, காத்தையன், கலியபெருமாள், சரவணன்,சங்கர், கண்ணதாசன் மற்றும் கிராமவாசிகள் கிட்ட பலர் பங்கேற்றனர் ‌

Tags

Next Story