பட்டபகலில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு முயற்சி

பட்டபகலில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு  முயற்சி

போலீசார் விசாரணை 

அரியலூர் அருகே மின்நகரில் வீட்டின் முன் நின்று கொண்டிருந்த மூதாட்டியின் தங்க சங்கிலியை மர்ம நபர் பறிக்க முயற்சித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
அரியலூர் அருகே மின்நகர் முதல் தெருவை சேர்ந்த வேணுகோபால் என்பவரின் மனைவி சித்ரா. வயது 62. இவர் தனது வீட்டின்முன்பு நின்று நேற்று போனில் பேசி கொண்டு இருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர், சித்ரா அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை பறிக்க முயன்றுள்ளார். அப்போது தங்கசெயினை பிடித்துகொண்டு சித்ரா கீழே விழுந்துள்ளார். இதனை கண்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதற்குள் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து அரியலூர் நகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டபகலில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story